+94 21 225 0826
Bishop met with inter-religious leaders in East

Bishop met with inter-religious leaders in East

Rt. Rev. Dr. V. Pathmathayalan marked Easter Sunday with a pastoral visit to Batticaloa, where he presided over the Holy Communion service, commemorating the resurrection of Jesus Christ.

Following the Easter worship, the Bishop met with inter-religious leaders and civil society activists at the Eastern Ministry Office of the Jaffna Diocese of the Church of South India (JDCSI). The meeting focused on strengthening interfaith collaboration and addressing key social and political concerns affecting the district.

During the discussion, civil rights activists shared their ongoing work and the challenges they face in promoting justice and community welfare. Bishop Pathmathayalan attentively listened to their concerns and affirmed the commitment of the JDCSI to fostering social harmony, building strong inter-religious relationships, and advocating for justice in the spirit and teachings of Jesus Christ.

The engagement highlighted the growing importance of faith-based collaboration in addressing contemporary social issues and promoting peaceful coexistence in the Eastern Province.

தென் இந்திய திருச்சபை யாழ் ஆதீன ஆயர் Rt. Rev. Dr. வே . பாத்மதயாளன் அவர்கள், ஈஸ்டர் நாளில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை நினைவுகூரும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையை நடத்தினார்.

ஈஸ்டர் ஆராதனைக்கு பின்னர், தென் இந்திய திருச்சபை (JDCSI) கிழக்கு பணியக அலுவலகத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சர்வமத தலைவர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஆயரை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் மாவட்டத்தின் சமூக-அரசியல் சவால்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்த உரையாடலின் போது, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தங்களின் பணிகள் மற்றும் தாம் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆயருடன் பகிர்ந்து கொண்டனர். சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல், மதங்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் வழியில் நீதி குரலை எழுப்புதல் ஆகியவற்றில் JDCSI-யின் அர்ப்பணிப்பை ஆயர் உறுதிப்படுத்தினார்.

மேலும் தற்போதைய சமூகத்தில் காணப்படும் சமூக சவால்களை எதிர்கொள்ள சர்வ மதங்களின் ஒத்துழைப்பின் அவசியம் கிழக்கு மாகாணத்தில் அமைதியான வாழ்வை மேம்படுத்துவதின் முக்கியத்துவம் போன்றவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

A solemn commemoration of S. J. V. Chelvanayakam

A solemn commemoration of S. J. V. Chelvanayakam

A solemn commemoration was held today to mark the death anniversary of S. J. V. Chelvanayakam, fondly remembered as “Thanthai Selva,” at his gravesite.

The event brought together clergy, community leaders, and members of the public who gathered to pay their respects and honour his enduring legacy of non-violence, justice, and commitment to the rights and dignity of his people. Floral tributes were laid, and prayers were offered in remembrance of his life and service.

The Bishop of the Jaffna Diocese of the Church of South India Rt.Rev.Dr.V.Pathmathayalan graced the occasion with his presence, alongside the Diocesan Secretary, Rev. Sathees Daniel. Their participation reflected the Diocese’s continued respect for Thanthai Selva’s principled leadership and his contribution to the social and political history of Sri Lanka.

The gathering concluded with a renewed call to uphold the values he stood for, inspiring future generations to pursue peace, unity, and justice in society.

“தந்தை செல்வா” என அழைக்கப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகம், அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் ஒரு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சமூக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, அஹிம்சை, நீதி மற்றும் தமது தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் அவரது உறுதியான பணியை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர். மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, அவரது வாழ்வு மற்றும் சேவையை நினைவுகூர்ந்து இறை வேண்டல்களும் ஏறெடுக்கப்பட்டன.

தென் இந்திய திருச்சபை யாழ் பேராயர் Rt. Rev. Dr. வி. பத்மதயாளன் அவர்களும் ஆதீன செயலாளர் அருட்பணி சதீஸ் டானியல் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தந்தை செல்வாவின் கொள்கைமிக்க தலைமையையும், இலங்கையின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் அவர் செய்த பங்களிப்பையும் தென் இந்திய திருச்சபை யாழ் ஆதீனம் தனது என்றும் நினைவு கூறுகின்றது.

தந்தை செல்வா நிலைநிறுத்திய விழுமியங்களைக் காத்து, வருங்கால சந்ததியினரைச் சமூகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் நீதியைப் பின்தொடர ஊக்குவிக்கும் ஒரு புதுப்பிக்கப்பட்ட அழைப்புடன் இன்றைய வணக்க நிகழ்வு கூட்டம் நிறைவடைந்தது.